அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!… post thumbnail image
புது டெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 18ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து, கண்காணித்து வந்தனர்.

அவரது உடல்நிலை சீரடைந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து, டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அவர் திரும்பினார். வீட்டில் பூரண ஓய்வில் இருக்கும்படியும், மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும்படியும் அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி