செய்திகள் செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பற்றி அறிந்த ஷாராபேகம் தானும், அந்த பழங்குடியின மக்களும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என விரும்பினார்.

இதற்காக தனது படக்குழுவினருடன் ஈக்வடார் நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அந்த இனத்தில் தலைவராக ஜிங்டோ என்பவர் இருந்து வந்தார். அவரை சந்தித்த ஷாராபேகம் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் ஜிங்டோவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதன்படி அவரை திருமணம் செய்து கொண்டார். ஜிங்டோவுக்கு ஷாராபேகத்தை விட 30 வயது அதிகமாகும். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தை பழங்குடி மக்களும் ஏற்றுக் கொண்டனர். அவருக்கு பறவை இறகுகளால் ஆன கிரீடத்தை சூட்டி தங்கள் ராணியாக பாவித்தனர். இதுபற்றி ஷாராபேகம் கூறும்போது, ஜிங்டோவுடன் குடும்பம் நடத்துவதற்காக அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த போராட்டம் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் மிகவும் அன்பான கணவர் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி