அவர்களது முகம் தனித்தனியே உள்ளபோதும், அடிவயிறு இருவருக்கும் ஒன்றாக இணைந்துள்ளது. அதே சமயம் இடுப்புக்கு கீழே இருவரும் தனித்தனி உடல் உறுப்புகளை கொண்டுள்ளனர். அவர்களது உடலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், கல்லீரலை தவிர அனைத்து பாகங்களும் தனித்தனியே இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை தனித்தனியே பிரிக்க முடிவு செய்துள்ளனர்.
எனினும் இவர்களை பிரிக்கும்போது, ஐந்து முதல் 25 சதவிகிதிம் தான் இருவரும் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்போது எவ்வித ஆபத்தும் நேராமல் இருக்க பிரார்த்தனை செய்யுமாறு பேஸ்புக் மூலம் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர். நாமும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி