அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…

பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…

பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!… post thumbnail image
பீஜிங்:-அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதுபோல் சீனாவில் ‘அமைதிக்கான கன்பூசியஸ் விருது’ 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருது உலக அமைதிக்கான முக்கிய பங்களிப்புக்காக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் பிரதமருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு அளிக்கப்பட்டது.

ஒன்பது நீதிபதிகள், 16 வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவே க்யூபப் புரட்சியின் நாயகனான பிடல் காஸ்ட்ரோவை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்தது. தென் கொரிய ஜனாதிபதி பார்க் கியுன், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் உட்பட தேர்வுப் பட்டியலில் இருந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை முறியடித்து காஸ்ட்ரோ இந்த விருதைப் பெறுவதாக பீஜிங் மாநிலத்தின் க்ளோபல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 88 வயதான பிடல் காஸ்ட்ரோவுக்கு பதிலாக ‘அமைதிக்கான கன்பூசியஸ் விருததை’ கியூப மாணவர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.
2006இல் தன் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ(88), தற்போது தனது ஓய்வு நேரத்தை அரசியல் சார்ந்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் செலவழித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி