செய்திகள்,திரையுலகம் ரஜினிக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து அனுப்பலாம்: தபால்துறை அறிவிப்பு!…

ரஜினிக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து அனுப்பலாம்: தபால்துறை அறிவிப்பு!…

ரஜினிக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து அனுப்பலாம்: தபால்துறை அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-இந்திய தபால் துறை இ-போஸ்ட் என்ற சேவையை நடத்தி வருகிறது. இதன்படி எங்கிருது வேண்டுமானாலும் இண்டர்நெட் மூலம் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தபால் அலுவலகத்திற்கு அனுப்பலாம். அதை சம்பந்தப்பட்ட தபால் நிலைய ஊழியர்கள் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இந்த சேவையின் மூலம் சூப்பர் ரஜினிக்கு வாழ்த்து அனுப்பலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல தபால்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்துக்கு வாழ்த்து அனுப்ப விரும்புகிறவர்கள் இ-போஸ்ட் மூலம் அதனை அனுப்பலாம். இண்டர்நெட் மூலம் சென்னை அபிராமபுரம் (600018) தபால் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை பிரிண்ட் எடுத்து ரஜினியின் இல்லத்தில் கொண்டு ஊழியர்கள் சேர்ப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி