செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்திற்கு வந்த புதிய தலைவலி!…

‘லிங்கா’ படத்திற்கு வந்த புதிய தலைவலி!…

‘லிங்கா’ படத்திற்கு வந்த புதிய தலைவலி!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ திரைப்பட புக்கிங் எல்லாம் புயல் வேகத்தில் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டது. நாளை திரையில் சூப்பர் ஸ்டாரை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க தற்போது அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் லிங்கா படத்தின் கதை என்னுடையது என கூறி ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இதற்கு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த விளக்கம் முரண்பாடாக இருந்தது. இந்நிலையில் நீதிபதி நிபந்தனையுடன் லிங்கா படத்தை ரிலீஸ் செய்யலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாளை பகல் 12 மணிக்குள் 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தினால் ‘லிங்கா’ படத்தை திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி