செய்திகள்,முதன்மை செய்திகள் அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…

அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…

அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் மலாலா ஆகியோர் இன்று கூட்டாக பெற்றுக் கொண்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்திய தாலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய 17 வயது பெண்ணான மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் உயிர் பிழைத்து, பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். இவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையிலேயே இருவருக்கும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசளிப்பு மேடையில் இன்று வாசிக்கப்பட்ட பட்டயத்தில் தெரிவிக்கப்படிருந்தது.
கைலாஷ் சத்யார்த்தி மற்றும் யூசுப் சாய் மலாலா ஆகியோருக்கு நோபல் பதக்கங்கள், பட்டயங்கள் மற்றும் பரிசுத் தொகையான 11 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான உறுதிப் பத்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி