செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…

மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…

மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் திரையரங்குகளில் ரசிகர்களை பயமுறுத்தியது மட்டுமில்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் யாமிருக்க பயமே. இப்படத்தை அறிமுக இயக்குனர் டி.கே இயக்கியிருந்தார். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

டி.கே மீண்டும் யாமிருக்க பயமே படத்தின் தயாரிப்பாளர் எல்ரேட் குமாருடன் கைக்கோர்க்கவுள்ளார். எல்ரேட் குமார் விண்ணை தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி