செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!… post thumbnail image
புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆபத்தாகிவிடும். வாரிய தேர்தலில் போட்டியிடாவிட்டால் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இன்று ஐ.பி.எல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது என்.சீனிவாசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டால், ஐ.பி.எல். விவகாரங்களில் தலையிடமாட்டேன். தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நிரூபிக்கும் வரை ஐ.பி.எல் போட்டி விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க தயார்.
எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்று என். சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே ஐ.பி,எல். சூதாட்ட வழக்கு குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்த கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விசாரித்த முத்கல் குழு அறிக்கையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.புதிதாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் சுயாட்சி உரிமை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மக்களின் நம்பிக்கையை காப்பாற்றா விட்டால் கிரிக்கெட் சீர் குலைந்து விடும் என்று கருத்து தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி