செய்திகள் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.3175 கோடி ஜீவனாம்சம் வழங்கிய தொழில் அதிபர்!…

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.3175 கோடி ஜீவனாம்சம் வழங்கிய தொழில் அதிபர்!…

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.3175 கோடி ஜீவனாம்சம் வழங்கிய தொழில் அதிபர்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் கிறிஸ்ஹோன் (48). நிதிநிறுவனம் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமீ ஹுப்பிர் ஹான் (49). இவர் அமெரிக்க வாழ் இங்கிலாந்தை சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்டு பல்கலை கழகத்தில் படித்த போது இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த கோர்ட்டு விவாகரத்து வழங்க கிறிஸ்ஹோன் தனது மனைவி ஜெமி ஹுப்பருக்கு ரூ.3175 கோடி வழங்க உத்தரவிட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டதால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

இதன் மூலம் இங்கிலாந்தில் விவாகரத்து பெற மனைவிக்கு மிக அதிக பணம் கொடுத்தவர் என்ற அந்தஸ்தை கிறிஸ்ஹோன் பெற்றுள்ளார். மேலும், விவாகரத்து மூலம் ரூ.3175 கோடி பெற்றதன் மூலம் இங்கிலாந்தின் 285 பணக்காரர் பட்டியலில் ஜெமி கூப்பரும் இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி