செய்திகள் மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!… post thumbnail image
அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரியவந்தது.

இந்நிலையில், சூரத்தில் உள்ள சச்சின் தொழிற்பேட்டை அருகே தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வரும் இவர், தனக்கு பிறந்த மகள் என்றும் கருதாமால், தனக்கு இருக்கும் எச்.ஐ.வி. தொற்று பற்றியும் கவலைப்படாமல் தனது 12 வயது மகளை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் கற்பழித்து விட்டார். அதைத் தொடர்ந்து அடிக்கடி இந்த தகாத உறவை நீட்டித்துக் கொண்டு வந்த அவர், இந்த தகவலை யாரிடமாவது சொன்னால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மிரட்டியதையடுத்து, பயந்துப்போன அந்த சிறுமி இந்த விஷயத்தை பரம ரகசியமாக வைத்திருந்தார்.

அவரது இம்சை எல்லை மீறிப் போகவே, தற்போது 15 வயதாகும் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை தாயிடம் கூறி அழுததையடுத்து, இருவரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். தந்தை என்ற வார்த்தைக்கே களங்கம் கற்பித்த அந்த 42 வயது நபரை இன்று கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி