மேலும், மாரீசன் படத்தில் தான் நடிப்பது பற்றி அவ்வப்போது டுவிட்டர் வாயிலாக உறுதிபடுத்திக்கொண்டே வந்த ஸ்ருதியிடம், படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறீர்களே. யார் முதன்மை நாயகி?… என்று கேட்டவர்களிடம், அது சஸ்பென்ஸ் என்று கூறி மெளனம் சாதித்து விட்டாராம். அதோடு, என்னைப்பொறுத்தவரை எத்தனை கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை.
எனக்குரிய கேரக்டர் பிடித்திருநதால் அதை சரியாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். இன்னொரு ஹீரோயின் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதைகூட நான் கேட்க விரும்பியதில்லை. அதேபோல்தான் இந்த படத்திலும் எனக்குரிய கேரக்டரை மட்டுமே கேட்டு நடிக்கிறேன். அதனால் யாருடைய கேரக்டர் முக்கித்துவம் வாய்ந்தது என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி