செய்திகள்,திரையுலகம் பிரியாணி வாங்கி தந்தேன், ஏழைகளுக்கு உதவி செய்தேன் – ‘பவர் ஸ்டார்’ ஓபன் டாக்!…

பிரியாணி வாங்கி தந்தேன், ஏழைகளுக்கு உதவி செய்தேன் – ‘பவர் ஸ்டார்’ ஓபன் டாக்!…

பிரியாணி வாங்கி தந்தேன், ஏழைகளுக்கு உதவி செய்தேன் – ‘பவர் ஸ்டார்’ ஓபன் டாக்!… post thumbnail image
சென்னை:-‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அங்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு குறும்பட வெளியிட்டு விழாவிற்கு சென்ற அவர், தன் மனதில் உள்ள அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்து விட்டார்.

இதில், நான் லத்திகா படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன், இப்படத்தை 100 நாள் ஓட்ட என்ன செய்ய வேண்டும் என்றேன். டிக்கெட் இலவசமாக தரலாம். கோழி பிரியாணி வாங்கி தரலாம் என்றார்கள்.
அதையெல்லாம் வாங்கி கொடுத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று மேடையிலேயே மனம் திறந்துள்ளார். மேலும் என்னை மோசடி வழக்கில் கைது செய்தார்கள். நான் என்ன செய்தேன் பணக்காரர்களிடம் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளித்தேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி