செய்திகள்,திரையுலகம் உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது. அந்த சம்பவம் மலையாளத்தில் டிராபிக் என்ற படமாக வந்ததும் இன்னும் விழிப்புணர்வு அதிகமானது. அதே படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அந்த படத்தில் நடிகர் சூர்யா தோன்றி உடல் உறுப்பு தானம் பற்றி பேசினார். ஆரம்பம் முதலே உடல் உறுப்பு தானம் பற்றி பேசி வரும் நடிகர்களான கமல், சரத்குமார் ஆகியோர் ஏற்கெனவே உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டனர். தற்போது சூர்யாவும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் உடல் உறுப்புதானம் தொடர்பாக ஒரு பேரணியை அவர் தொடங்கி வைத்தார். அதனை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். இவர்கள் தவிர நடிகை சினேகாவும், அவரது கணவர் பிரசன்னாவும் ஏற்கெனவே உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி