செய்திகள்,திரையுலகம் இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…

இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…

இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் இன்று இந்தியா வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது: நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன்.

மிகச்சிறந்த நாடான இந்தியாவிற்கு வருவதை நான் விரும்புகிறேன். இங்கு மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளது. இங்குள்ள மக்கள் மிகவும் திறமைசாலிகளாகவும் கடின உழைப்பு மிக்கவர்களாகவும் உள்ளனர். எனக்கு எப்போதுமே இங்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் விரைவில் மீண்டும் இங்கு வருவேன் என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி