செய்திகள்,திரையுலகம் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…

‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…

‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!… post thumbnail image
சென்னை:-17 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, அக்டோபர்மாதம், எலிசெபத் ராணியால் சென்னையில் மருதநாயகம் படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில, பல காரணங்களால் அந்தப்படம் மேற்கொண்டு வளராமலேயே போய்விட்டது. அந்தப்படத்திற்காக, முதன்முதலில் டிரைலரையே படமாக்கி திரையிட்டவர் கமல்ஹாசன். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்ற உயர்ந்த தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக்காலத்திலேயே, அவருடைய உழைப்பு அப்போது அதிகம் பேசப்பட்டது.

இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் மருதநாயகம் படத்தை எடுத்து முடிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், படத்திற்கான செலவு 200 கோடிகளைத் தொட்டாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று தமிழிலேயே ஐ மற்றும் லிங்கா ஆகிய படங்கள் 100, 150 கோடிகளில் உருவாக்கப்பட்டுவரும்போது மருதநாயகம் படத்தை உருவாக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு முதலில் முதலீட்டைத் திரட்ட வேண்டும். பெரிய நிறுவனங்கள் மனதுவைத்தால் அதை நிறைவேற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அப்படியே, இல்லையென்றாலும் கிரௌட்ஃபண்டிங் என்று அழைக்கப்படும் பொதுமக்களின் முதலீட்டை வைத்து கூட அந்த வரலாற்றுப்படத்தை எடுக்க முடியும்.

தெலுங்கில் பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திரப் படங்களை, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும்போது, இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்று விளங்கும் கமல்ஹாசன் நினைத்தால் மருதநாயகம் படம், மீண்டும் மலரும் வாய்ப்பு உள்ளது. தமிழ் திரைப்பட உலகிலும் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க முடியும். அதற்கு, கமல்ஹாசன் மனது வைக்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி