செய்திகள்,திரையுலகம் அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘ஐ’ ஹிந்தி டப்பிங் உரிமை!…

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘ஐ’ ஹிந்தி டப்பிங் உரிமை!…

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘ஐ’ ஹிந்தி டப்பிங் உரிமை!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.அடுத்த மாதமாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படம், பொங்கலுக்கோ அல்லது அதன்பிறகோ தான் வெளிவரும் என்றும் ஒருபக்கம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும் படத்தின் வியாபார பேச்சுகள் மறுபக்கம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, தெலுங்கு டப்பிங்உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டு விட்ட நிலையில் மற்ற மொழிகளிலும் வியாபாரப் பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

ஐ படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையும் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். வழக்கமாக தமிழ்ப்படங்கள் ஹிந்திக்கு டப்பிங் ஆகும் போது சுமாரான விலைக்கு தான் விற்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தப்படம் வழக்கமான விலையை விட டபுள் மடங்கு அதிகமாக விற்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பிரபல ஹிந்தி நடிகையான ரவீனா டாண்டனின் கணவரான அனில்தடானி படத்தின் டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறாராம்.

இவர், மும்பையில் பிரபல வினியோகஸ்தராக இருப்பவர்.இதனிடையே, ஐ படவெளியீடு மற்ற மொழி டப்பிங்கினால் தாமதமாகிவருகிறது என்றும் சொல்கிறார்கள். இந்திய மொழிகள் தவிர, சீன மொழி உட்பட மேலும் சில மொழிகளிலும் அந்தந்த நாடுகளில் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அவையனைத்தும் முடிந்தபிறகே, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும், என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி