செய்திகள் போட்டோ எடுக்க முகம் காட்டியதால் திருமணத்தன்று இரவில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!…

போட்டோ எடுக்க முகம் காட்டியதால் திருமணத்தன்று இரவில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!…

போட்டோ எடுக்க முகம் காட்டியதால் திருமணத்தன்று இரவில் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!… post thumbnail image
ரியாத்:-சவுதி அரேபியாவின் மதினா நகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள வில்லை.இந்நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு நடந்தது. அப்போது போட்டோ எடுக்கப்பட்டது.

அப்போது போட்டோ கிராபர் மணமகளிடம் முகம் காட்டும்படி கூறினார். உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு போட்டோவுக்கு முகம் காட்டினார். இதனால் மணமகன் கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தார்.எனக்கு முதலில் முகம் காட்டாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதா என கோபமடைந்தார். உடனே, அந்த மணமகளை அன்று இரவே விவாகரத்து செய்தார்.

இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும்,. மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. விவாகரத்து நடந்து முடிந்து விட்டது. இதனால் மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து இணைய தளங்களில் செய்தி வெளியானது அதைப்பார்த்து பலர் மணமகனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி