செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சிங்கப்பூர் மருத்துவமனையில் பிரபல நடிகை ‘டிஸ்கோ சாந்தி’ அனுமதி!…

சிங்கப்பூர் மருத்துவமனையில் பிரபல நடிகை ‘டிஸ்கோ சாந்தி’ அனுமதி!…

சிங்கப்பூர் மருத்துவமனையில் பிரபல நடிகை ‘டிஸ்கோ சாந்தி’ அனுமதி!… post thumbnail image
சென்னை:-90களில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கும் நடனமாடியிருக்கிறார்.

கடந்த 1996ம் ஆண்டு டிஸ்கோ சாந்தி, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஐதராபாத்தில் செட்டில் ஆனார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சென்ற வருடம் அக்டோபர் மாதம் டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கணவர் இறந்த பிறகு டிஸ்கோ சாந்தியின் உடல்நிலையும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் டிஸ்கோ சாந்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி