இந்திய விஞ்ஞானிகளின் இன்னொரு நீண்ட வேட்கையாக இருப்பது விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்கும் திட்டமாகும். இதுவும் நிறைவேற வாய்ப்பு தற்போது உருவாகி இருக்கிறது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-இப்போதிலிருந்து அடுத்த 7 ஆண்டுகளில், அதாவது 2021-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்கும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இந்த விண்வெளி பயணத்துக்குத் தேவையான வடிவமைப்பு, மேம்பாட்டு முயற்சிகளை இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.- மிமிமி ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த சில நாட்களில் விண்வெளிக்கு 3 வீரர்கள் பயணம் செய்யக் கூடிய முன்மாதிரி கூடு வடிவத்தை இஸ்ரோ பரிசோதனை செய்து பார்க்கும்.மேலும், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கக் கூடிய ‘மார்சியன் லேண்டர்’ என்னும் சாதனத்தின் வடிவமைப்பை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. விரைவில் அதனை தயாரிக்கும் நிலைக்கு நாங்கள் வருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி