செய்திகள்,திரையுலகம் 25 லட்சம் கேட்டு மிரட்டும் நடிகை ஓவியா!…

25 லட்சம் கேட்டு மிரட்டும் நடிகை ஓவியா!…

25 லட்சம் கேட்டு மிரட்டும் நடிகை ஓவியா!… post thumbnail image
சென்னை:-கலகலப்புக்கு பிறகு கவர்ச்சி புயலாக உருவெடுத்தவர் நடிகை ஓவியா. இப்போது சரத்குமாருடன் சண்டமாருதம். சீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஒரு சுற்று அதிகபடுத்தி கிளுகிளு நாயகியாக உருவெடுத்திருக்கும் ஓவியா, அடுத்தபடியாக தன்னை புக் பண்ண வரும் படஅதிபர்களிடம் கதை மற்றும் தனது கதாபாத்திரம் பற்றி கேட்டபதற்கு முன்பே கரன்சியைப் பற்றித்தான் முதல் சுற்று பேச்சுவார்த்தையே தொடங்குகிறாராம்.

அதாவது, இப்போது என் மார்க்கெட் திருப்திகரமாகவே உள்ளது. சரத்குமார் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறேன் அடுத்து முன்னணி இளவட்ட ஹீரோக்களுடனும் நடிக்க கதை கேட்டு வைத்திருக்கிறேன் என்று பில்டப் கொடுத்து பேச்சைத் தொடங்குபவர், அப்படி கதை கேட்டுள்ள படங்களில் நடிக்க 25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறேன். அதனால் அந்த தொகையை தர முடியும் என்றால் மேற்கொண்டு பேசுங்கள். இல்லையேல் ஏறக்கட்டுகள் என்கிறாராம். ஓவியாவின இந்த அதிரடியான பேச்சைக்கேட்டு, அம்மாடி ஆளை விடு தாயி என்று ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் பட அதிபர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி