செய்திகள்,விளையாட்டு வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!… post thumbnail image
குல்னா:-ஜிம்பாப்வே அணி எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வங்காளதேச அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன் 44 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளும், தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஜூபைர் ஹூசைன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முன்னதாக ஷகிப் அல்-ஹசன் முதலாவது இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார்.

அத்துடன் முதலாவது இன்னிங்சில் அவர் சதமும் (137 ரன்) விளாசி இருந்தார். 137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், அதில் சதமும் அடித்த 3-வது வீரர் என்ற அரிய பெருமையை ஷகிப் அல்-ஹசன் பெற்றார்.முன்னதாக இங்கிலாந்தின் இயான் போத்தம் ( 114 ரன், மொத்தம் 13 விக்கெட்) 1980-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானின் இம்ரான்கான் (117 ரன், 11 விக்கெட்) 1983-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும் இச்சிறப்பை பெற்றிருந்தனர்.

ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.27 வயதான ஷகிப் அல்-ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், இப்படியொரு சாதனை இருப்பதை சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையார் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். நாமும் அச்சாதனை பட்டியலில் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன். அதிர்ஷ்டவசமாக இந்த டெஸ்டிலேயே அதை செய்திருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி