செய்திகள்,விளையாட்டு மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!… post thumbnail image
புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர் மூலம் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு மக்கள் விரும்பும் வீரர் விருது இறுதிபட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர்குமார், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், இலங்கை கேப்டன் மேத்யூஸ், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய மூன்று வார காலம் ரசிகர்கள் வாக்களித்தனர். இதன் முடிவில் மக்கள் விரும்பும் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சச்சின் தெண்டுல்கர் (2010), சங்கக்கரா (2011, 2012), டோனி (2013) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த விருதை புவனேஷ்வர்குமார் பெறுகிறார். தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள 24 வயதான புவனேஷ்வர்குமார், அணியின் சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். அவர்களின் (சக வீரர்கள்) ஆதரவு இல்லை என்றால் இது நடந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி