செய்திகள்,திரையுலகம் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளவில்லை – ஸ்வேதா பாசு!…

என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளவில்லை – ஸ்வேதா பாசு!…

என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளவில்லை – ஸ்வேதா பாசு!… post thumbnail image
சென்னை:-தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில் ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட போது கையும், களவுமாக போலீசாரிடம் சிக்கினார். அவருடன் விபசார தரகர், மும்பை தொழில் அதிபர்கள் சிலரும் சிக்கினர். ஆனால், அந்த தொழில் அதிபர்களின் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை. ஓட்டலில் நடிகை ஸ்வேதா பாசுவை மீட்ட போலீசார் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். 2 மாதங்கள் கழித்து காப்பகத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு முதல்முறையாக மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது கூறியதாவது:– என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தன. நான் என்னைப்பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தேன்.
ஆனால், என்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் நான் சொன்னதாக வந்து கொண்டு இருந்தன. இதற்காக பத்திரிகையாளர்களைத் தவிர வேறு யார் மீதும் நான் குறைகூற விரும்பவில்லை. விரைவில் நான் விரிவான விளக்கம் அளிப்பேன்.இவ்வாறு ஸ்வேதா பாசு கூறினார்.

தன்னைப்பற்றிய தகவல்களை மறுத்த ஸ்வேதா பாசு, தான் விபசார வழக்கில் சிக்கியதை மறுக்கவில்லை.ஸ்வேதா பாசு விபசார வழக்கில் சிக்கியதும், அன்றாட செலவுக்கே பணம் இல்லாததால் சிலரின் தூண்டுதலால் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளப்பட்டதாக ஸ்வேதா பாசு தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியானது. அதை மட்டும் தற்போது மறுத்து இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி