செய்திகள் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!… post thumbnail image
ராய்பூர்:-ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை, அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக போதை தலைக்கேறிய நிலையில் வந்த சுக்தேவ் தனுஹர்(50) என்பவன் சாக்லேட் வாங்கித் தருவதாக அந்த சிறுமிக்கு ஆசைகாட்டி தனிமையான இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

பச்சிளம் தளிர் என்றும் பாராமல், தனது தகாத இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற அந்த காமக் கொடூரன், வலியால் குழந்தை வீறிட்டு அலறத் தொடங்கியதும் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.
குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அந்த இடத்துக்கு விரைந்த பெற்றோர், அவளது உடலில் காயங்கள் இருப்பது கண்டு பதறிப்போய் போலீசில் புகார் அளித்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குழந்தை கூறிய அடையாளங்களை வைத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி