கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக, பல கோடி மக்கள் பார்க்கும் சினிமாவில் விஜய் யன்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப் படாத நிலையில், அதை குற்றமாக சித்தரித்து கோர்ட்டை அவமதித்து உள்ளனர்.இந்தியாவை ஊழல் நாடாக சித்தரித்து, அன்னிய நாடுகள் உயர் தொழில்நுட்பத்தை, இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் சூழலை உருவாக்கியுள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 500ன் படி நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாஜிஸ்திரேட் மாரீஸ்வரி முன், மனு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை, நவ., 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி