செய்திகள்,திரையுலகம் வீடுகட்ட மண் சுமந்த நடிகை இலியானா!… உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’…

வீடுகட்ட மண் சுமந்த நடிகை இலியானா!… உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’…

வீடுகட்ட மண் சுமந்த நடிகை இலியானா!… உணர்ச்சிகரமான ‘பிளாஷ்பேக்’… post thumbnail image
சென்னை:-பாலிவுட்டில் நடிகை இலியானா மார்க்கெட் எகிறி நிற்பதால், படத்துக்குப் படம் தன் படக்கூலியை உயர்த்தி வருவதாக, அவரைப்பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,இந்த செய்தியை அதிரடியாக மறுத்துள்ளார் இலியானா. நான் ஒன்றும் பணத்தின் அருமை தெரியாதவள் அல்ல. சின்ன பெண்ணாக இருந்தபோது, மும்பையில் வாடகை வீட்டில் தான் வசித்தேன்.

அதன்பின், கோவா சென்று கஷ்டப்பட்டு, ஒரு வீடு கட்டினார் என் தந்தை. கொத்தனாருக்கு கூட பணம் கொடுக்க முடியாமல், நாங்களே மண் சுமந்து, அந்த வீட்டின் பூச்சு வேலைகளை செய்தோம். அப்போதெல்லாம், நான் மண் தரையில் தான் துாங்குவேன்.இப்படி கஷ்டப்பட்டு வளர்ந்த எனக்கு, தயாரிப்பாளரின் கஷ்டங்களை உணர முடியும். அதனால், எந்த பட தயாரிப்பாளர்களையும், நான் கஷ்டப்படுத்துவதில்லை என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி