செய்திகள்,திரையுலகம் ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே ‘கத்தி’ விஜய்!…

ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே ‘கத்தி’ விஜய்!…

ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே ‘கத்தி’ விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் திரையிட்ட எல்லா சென்டர்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, விஜய் நடித்த படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பெயரும் ரசிகர்களின் கருத்தாகி விட்டதால், எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் கத்தி ஓடும் என்கிற கருத்துக்களும் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாக்ஸ் ஆபீசில் கத்தியின் வசூல் கன்னாபின்னாவென்று எகிறிக்கொண்டிருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி அப்பட டைரக்டர் முருகதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தீபாவளி அன்று வெளியான கத்தி படம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் 23 கோடியே 80 லட்சத்தை வசூலித்ததாக தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 16 கோடியே 45 லட்சமும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்சமும் வசூலானதாகவும் கூறுகிறார். அந்த வகையில், தென்னிந்திய அளவில் இதுவரை எந்த படங்களும் இந்த அளவுக்கு முதல்நாளில் வசூலித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த பட பட்டியலில் ரஜினியின் எந்திரன்தான் முதலிடத்தில் இருந்தது. அதையடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இடம்பிடித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இரண்டு படங்களையும் பின்தள்ளிவிட்டு முதலிடத்துக்கு சென்றிருக்கிறது விஜய்யின் கத்தி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி