செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சுட்டுக்கொலை!…

தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சுட்டுக்கொலை!…

தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சுட்டுக்கொலை!… post thumbnail image
ஜோகன்ஸ்பர்க்:-தென்ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்கோ மெய்வா. 27 வயதான இவர் அணியின் கோல் கீப்பராக உள்ளார். சென்கோ மெய்வாவின் வீடு ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள ஒசூருல்ஸ் நகரில் உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டு கதவை மர்ம மனிதர்கள் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் சென்கோ மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் பலியானார். அவரது கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விளையாடிய ஆர்லண்டா கிளப் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளது. அவர் கடந்த ஆண்டு தான் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி