செய்திகள்,திரையுலகம் தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…

தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…

தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாசும் இணைந்துள்ள படம் ‘என் வழி தனி வழி’. கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் ஆர்.கே.யுடன் பூனம் கௌர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாக்ஷி தீட்சித் இன்னொரு கதாநாயகியாக, நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், தம்பி ராமையா, சிங்கமுத்து என ஏராளமானோர் நடித்துள்ளனர். காவல்துறை சம்பந்தப்பட்ட கதை. இதனை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளோம். எல்லாம் அவன் செயல் படம் வந்தபோது என்னை எல்லோரும் வக்கீல் என்றே நினைத்தார்கள். அதைப்போல இப்படம் வெளிவந்தால் என்னை ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி என்று சொல்ல வைக்கும் விதமாக இதில் என்னுடைய கேரக்டர் அமைந்துள்ளது. நல்ல கதை களம்

என்று இப்படம் குறித்து சொன்ன ஆர்.கே., என் வழி தனி வழி. படத்தின் கதை ஜோர்டான், இஸ்ரேல் என பல நாடுகளில் பயணிக்கும் என்றும் சொல்கிறார். இளைய தளபதி, புரட்சித்தளபதி, சின்னத்தளபதி பட்டங்கள் வரிசையில் தனக்குத் தானே மக்கள் தளபதி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார் ஆர்.கே.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி