செய்திகள்,திரையுலகம் இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…

இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…

இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!… post thumbnail image
கேரளா:-கேரளாவில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டவர் நடிகை சரிதா நாயர். தொலைக்காட்சி நடிகையான இவர், பெண் தொழிலதிபரும்கூட. அவரது இந்த மோசடியில் பல அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருந்தது. என்றாலும் அவர்களெல்லாம் அதிகார பலத்தை கொண்டு தப்பித்து விட்டதோடு, சரிதா நாயரை சிக்க வைத்து ஜெயிலுக்குள் தள்ளி விட்டனர். அதனால் பல மாதங்களுக்குப்பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சரிதாநாயர்.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எம்.பி அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறிய சரிதா நாயர், தன்னுடன் நெருக்கமாக இருந்த மேலும் சில அரசியல் புள்ளிகள் பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டார். இதன் காரணமாக கேரளா அரசியல்வாதிகள் கடும் கலவரம் அடைந்தனர். யார் யாரது பெயரை சரிதா நாயர் வெளியிடப் போகிறாரோ என்று பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவின.இந்நிலையில், சரிதா நாயரை ஆப் பண்ணும் முயற்சியாக, அவருக்கு எதிரான அரசியல்வாதிகள் அவரது நிர்வாண வீடியோவை இணைதளங்களில் பரவ விட்டுள்ளார்கள்.

இந்த தகவல் சரிதா நாயரின் காதுக்கு சென்றதையடுத்து அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறார். அதேசமயம் இது தனக்கு எதிரான அரசியல்வாதிகள் செய்யும் வேலைதான் என்பதை புரிந்து கொண்ட அவர், என் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான அசிங்கமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இதை வெளியிட்டவர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன். அதோடு, என்னை இப்படி அவமானப்படுத்தியவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் விடமாட்டேன் என்றும் ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார் சரிதா நாயர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி