செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து!…

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து!…

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து!… post thumbnail image
விசாகப்பட்டினம்:- கிரிக்கெட் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நாளை நடக்க இருந்த 3வது ஒரு நாள் போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.அச்சுறுத்திக் கொண்டிருந்த ‘ஹூட்ஹூட்’ புயல் நேற்று துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை கடந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மைதானத்திற்கும் சேதம் ஏற்பட்டது. இன்றும் அங்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு நாட்களுக்குள் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற இயலாது என்பதால் இந்த ஆட்டம் கைவிடப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணைச் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்தார். வானிலை சரியாகி விட்டால், போட்டியை நடத்தி விடலாம் என்று உள்ளூர் கிரிக்கெட் சங்கம் கூட நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த ‘ரிஸ்க்’கும் எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த தொடர் 4 போட்டி கொண்ட தொடராக மாறியுள்ளது. அடுத்த ஆட்டம் வருகிற 17ம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி