சென்னை:-அஜீத் நடிக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும் காட்சிகளில் யாராவது ஒரு பிரபலம் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கௌதம் மேனனுக்கு, முதலில் ஞாபகம் வந்தது கமல்தான்.
ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியதில் திருப்தியடைந்த கௌதம் மேனன் இப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதால். இதற்காக விரைவில் அவரை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி