அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சசிதரூர் தெரிவித்தார்.

ஆனால் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தரருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால் இல்லற வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுனந்தா, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சில நாட்களில் அவர் இறந்திருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் கிளம்பியது.இதையடுத்து சுனந்தாவின் சாவு குறித்து டெல்லி போலீசார் நடத்திய விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். மேலும் சுனந்தாவின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.

கடந்த 9 நாட்களுக்கு முன்பு ரசாயன பரிசோதனை அறிக்கையினை டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் தாக்கல் செய்தனர்.அந்த அறிக்கையில் சுனந்தாவின் சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவை சீராகவே இருந்துள்ளது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்க விஷம் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது குடலில் விஷ மருந்துகள் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் சுனந்தாவின் சாவுக்கு விஷம் அருந்தியதே காரணம் என்ற முடிவுக்கு டாக்டர்கள் குழு வந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி