ஆனால் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தரருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால் இல்லற வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுனந்தா, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சில நாட்களில் அவர் இறந்திருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் கிளம்பியது.இதையடுத்து சுனந்தாவின் சாவு குறித்து டெல்லி போலீசார் நடத்திய விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். மேலும் சுனந்தாவின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.
கடந்த 9 நாட்களுக்கு முன்பு ரசாயன பரிசோதனை அறிக்கையினை டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் தாக்கல் செய்தனர்.அந்த அறிக்கையில் சுனந்தாவின் சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவை சீராகவே இருந்துள்ளது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்க விஷம் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது குடலில் விஷ மருந்துகள் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் சுனந்தாவின் சாவுக்கு விஷம் அருந்தியதே காரணம் என்ற முடிவுக்கு டாக்டர்கள் குழு வந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி