செய்திகள்,விளையாட்டு முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…

முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…

முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!… post thumbnail image
கொச்சி:-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.ஒருநாள் போட்டி நாளை தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. கொச்சியில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

டோனி தலைமையிலான இந்திய அணியில் ஷிகார் தவான், வீராட் கோலி, முரளி விஜய், அம்பதிராயுடு, ரஹானே, சுரேஷ் ரெய்னா ஆகிய பேட்ஸ்மேன்களும், மொகித்சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, ஜடேஜா, அமித் மிஸ்ரா, உமேஷ்யாதவ் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீர் யாதவ் அறிமுக வீரராக உள்ளார். தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித்சர்மா காயத்தால் விலகி உள்ளதால் ஷிகார் தவானுடன் தமிழக வீரர் முரளிவிஜய் தொடக்க வீரராக களம் இறங்குவார்.இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் சொதப்பிய நட்சத்திர வீரர் வீராட் கோலி திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேபோல ஷிகார் தவானும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிகாட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

வெய்ன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்மன்ஸ், வெய்ன் சுமித், டாரன் பிராவோ, சாமுவேல்ஸ், பொல்லார்ட், டாரன் சமி, ராம்தின் போன்ற பேட்ஸ்மேன்களும், ரவி ராம்பால், ஹோல்டர், ரசூல், ரோச் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.வெஸ்ட்இண்டீஸ் அணியில் உள்ள வீரர்கள் பலர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் கைக்கொடுக்கும். இதனால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.நாளை போட்டி நடைபெறும் கொச்சியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி