செய்திகள்,விளையாட்டு பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…

பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…

பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!… post thumbnail image
இன்சியான்:-ஆசிய குத்துச்சண்டையில் 60 கிலோ பிரிவில் அரை இறுதியில் இந்தியாவின் சரிதாதேவி தென்கொரியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். வெண்கலம் வென்ற அவர் பதக்கத்தை கழுத்தில் அணியாமல் கைகளில் வாங்கி தென்கொரியா வீராங்கனை கழுத்தில் அணிவித்தார்.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் இந்திய அணி நிர்வாகம் சமரசத்தையடுத்து பதக்கத்தை மீண்டும் பெற்றார்.இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு சரிதாதேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், இச்செயலுக்காக வருத்தமும், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி