செய்திகள்,திரையுலகம் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – திரிஷா!…

குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – திரிஷா!…

குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – திரிஷா!… post thumbnail image
சென்னை:-குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திரிஷா கூறினார். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடக்கும் உயிர்ப்பலிகள் சமீப காலமாக பெருகி வருகிறது. நடிகர்கள் பலரும் போதையில் வண்டி ஓட்டி சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்களுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவர் கூறியதாவது:–

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் நிறைய அப்பாவி மக்கள் சாகடிக்கப்படுகின்றனர். இந்த குற்றங்களை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குடிபோதையில் வண்டி ஓட்டும் குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருப்பேன். பணியில் இருக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பேசாமல் வீட்டுக்கு போய் குடித்து விட்டு தூங்கலாமே.

எனது கார் டிரைவர் குடித்து இருப்பதாக நான் அறிந்தால் கூட உடனடியாக அவரை போலீசில் ஒப்படைத்து விடுவேன். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஐதராபாத் போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். குடிகாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். நிறைய டிரைவர்கள் குறைந்த படிப்பறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.இவ்வாறு திரிஷா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி