செய்திகள்,திரையுலகம் நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!… post thumbnail image
சென்னை:-சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக அஞ்சலிக்கு நிறைய மர்ம போன் கால்கள் வருகிறதாம். எதிர்முனையில் பேசுபவர் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்களாம். சில நேரங்களில் அவர்கள் பேசுவதே இல்லையாம். இப்படி அடிக்கடி நிகழ்கிறதாம். ஆனால் அந்த போன் நம்பர் யாருடையது என்று அஞ்சலி தரப்பில் சேர்ச் பண்ணினால் அது பப்ளிக் போனாக இருக்கிறதாம்.

இதன்காரணமாக, தற்போது தனது போன் நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார் அஞ்சலி. சில முக்கியத்துவம் வாய்ந்த டைரக்டர், பட அதிபர்களிடம் மட்டுமே தன் நம்பரை கொடுத்திருப்பவர், வேறு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி