செய்திகள்,திரையுலகம் மீண்டும் கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகை மீனாட்சி!…

மீண்டும் கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகை மீனாட்சி!…

மீண்டும் கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகை மீனாட்சி!… post thumbnail image
சென்னை:-கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் தமிழுக்கு வந்த கோல்கட்டா அழகி மீனாட்சிக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும், கன்னட சினிமாவிற்கு படையெடுத்த அவரை அங்குள்ள இயக்குனர்கள் கண்டுகொள்ளாததால், மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்து கொண்டிருந்தார். அவரது தொடர் முயற்சி காரணமாக தற்போது வில்லங்கம் என்ற படத்தில் நந்தாவுடன் நடிக்கிறார்.

அதோடு, தனுஷ் நடிக்கும் சூதாடி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், விக்ரம்பிரபுவின் வெள்ளக்காரதுரை படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார். இதை பார்த்த சிலர், கதாநாயகியாக நடிக்கும்போது குத்துப்பாட்டுக்கு ஆடி எதற்காக மார்க்கெட்டை கெடுத்துக்கொள்ள வேண்டும்… என்றார்களாம்.

அதைக்கேட்ட மீனாட்சியோ, குத்துப்பாட்டுக்கு ஆடுவதால் மார்க்கெட்டுக்கு எந்த பங்கமும் வராது. சொல்லப்போனால் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளுக்குத்தான் அயிட்டம் பாடல்களில் ஆடும் வாய்ப்பே கிடைக்கிறது. அந்த வகையில் இந்த வாய்ப்பு கிடைத்த பிறகுதான் மீண்டும் தமிழில் எனது மார்க்கெட் உயர்ந்திருப்பதாக அறிகிறேன் என்றாராம் மீனாட்சி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி