செய்திகள் சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…

சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…

சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஆக்ரா நகரம் யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது.இங்குள்ள சாஸ்திரிபுரம் பகுதியில் வசித்த தாயை இழந்த சுமிக்‌ஷா என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமால் போனாள்.

இது குறித்து சிறுமியின் தந்தை தனது இரண்டாவது மனைவி அர்ச்சனாவிடம் கேட்டபோது, வெளியே விளையாடச் சென்றவள் வீடு திரும்பவில்லை என்று அந்த சிறுமியின் சிற்றன்னையான அந்தப் பெண் பதில் அளித்தாள்.இதற்கிடையே, தனது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த சுமிக்‌ஷாவை உயிருடன் புதைத்துவிட்டதாக தனது உறவினர் ஒருவரிடம் அர்ச்சனா உளறி வைக்க, அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து, விரைந்துவந்த போலீசார் அர்ச்சனாவை கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், சுமிக்‌ஷாவை உயிருடன் புதைத்த இடத்தையும் காட்டினார்.அங்கு புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் பிரேதத்தை சவக்குழியில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அர்ச்சனா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி