செய்திகள் டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி!…

டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி!…

டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா சென்ற இளம் வாலிபரை வெள்ளைப் புலி ஒன்று கடித்து கொன்றது. புலி நடமாடும் பகுதியின் சுற்றுச் சுவரிலிருந்து தவறி விழந்த அந்த வாலிபரை புலி கடித்து கொன்றதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

சுற்றுச் சுவர் மிகவும் குறைந்த உயரத்துடன் இருந்ததால் அந்த வாலிபர் தவறி விழ நேரிட்டதாக கூறப்படுகிறது. புலி வசிப்பிடத்திற்குள் அந்த வாலிபர் தவறி விழுந்த போதிலும் முதலில் புலி அந்த வாலிபரை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அந்த வாலிபர் புலியை கல்லால் அடித்தால் அது அவரை திருப்பி தாக்கத் தொடங்கியது. அவரது கழுத்தை கவ்விய புலி, புரட்டிப் புரட்டி எடுத்து கொன்றதாக நேரில் பார்த்த மற்றவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி