செய்திகள்,விளையாட்டு வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!… post thumbnail image
புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க விரும்பிய சக வீரரான அம்பதி ராயுடு, செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்து சுடச்சுட ஐதராபாத் பிரியாணியை சமைத்து அனுப்பி வைத்தார்.

ஆனால், அதனை ஓட்டலுக்குள் வைத்து சாப்பிட ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. டோனிக்கு வீட்டில் சமைத்த உணவு என்றால் அலாதி பிரியம். அப்படியிருக்கும்போது அதனை ஓட்டல் நிர்வாகம் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த டோனி, தனது அணி வீரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைவரையும் வேறு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.பிரியாணிக்காக ஓட்டலை காலி செய்ததாக கூறினாலும், ஓட்டலில் வேறு ஏதாவது சமைத்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதுபற்றி ஓட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில், “பிரியாணிதான் அவர்கள் சென்றதற்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், டோனி ஓட்டலில் மகிழ்ச்சியாக இல்லை” என்றார்.
கிராண்ட் ககாடியா ஓட்டலில் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவு வகைகளை சாப்பிட அனுமதிப்பதில்லை. ஆனால், டோனி விஷயத்தில் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டை தளர்த்தியது.ஆனால், போர்டு அறையில் வைத்துதான் சாப்பிடுவோம் என்று டோனி பிடிவாதம் பிடித்துள்ளார். இதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்ததால் டோனி ஆத்திரத்தில் ஓட்டலை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி