செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….

தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….

தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!…. post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடித்து வரும் ‘கத்தி‘ படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இதனிடையே தமிழில் அவர் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு இயக்குனர் சமந்தாவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போக அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்றும் சொன்னாராம்.

மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் சமந்தா நடிக்கப் போவதில்லை. படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் , எத்தனை நாட்களில் படப்பிடிப்பு முடியும் போன்ற விவரங்களை சமந்தா கேட்டிருப்பதாகவும், அந்தத் திட்டமிடல் முடிந்த பின் அது பற்றி சமந்தா முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி