மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட ரஜினி, கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானெல்லாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி அப்போது நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன். 5 வருடத்திற்கு முன்பே இந்த கதையை ஷங்கர் ரெடி பண்ணி விட்டார் என்றார் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி