திரையுலகத்தைச் சேர்ந்த பல இயக்குனர்களும் டீஸரைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிட வேண்டியவர் ‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘நான் ஈ’ படத்தில் அவருடைய கிராபிக்ஸ், பிரம்மாண்டம் தமிழ் ரசிகர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. தற்போது ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார்.
தென்னிந்தியாவில் ஷங்கருக்கு அடுத்து பிரம்மாண்டத்தில் அசத்தும் இயக்குனர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஐ’ டீசரைப் பற்றி அவர் கூறியிருப்பதாவது, ஷங்கர் ஸார்……ஐ டீசர்…பிரமிக்க வைக்கிறது, அவரின் பிரம்மாண்டத்திற்கும், காட்சியமைப்பிற்கும், ஒருவரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி