சில நாட்களுக்கு முன்னர் விஜய், அனிருத் இசையமைப்பில் செல்பி புள்ள என்ற பாடலை பாடினார். விஜய் பாடுவதற்கு முன்னர் அனிருத் முழுப்பாடலையும் விஜய்க்கு பாடி காட்டினார். இரண்டு பேருமே பாடிய பாடல்களும் ஒலிப்பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால் விஜய் பாடிய பாடல்தான் படத்தின் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.இந்நிலையில் அனிருத் பாடிய செல்பி புள்ள பாடல் இன்று காலை இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டது. அனிருத் இசைக்குழுவில் இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்த பாடலை லீக் செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இதனால் கத்தி படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இதையொட்டி அனிருத் ரிகார்டிங் செய்யும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கத்தி படத்தினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டால் ரிலீஸுக்கு முன்னரே படத்தை எப்படியாவது கைப்பற்றி இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என படக்குழுவினர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி