இந்த முயற்சியை தொடர்ந்து வரும் செப்டம்பர் 24ம் தேதி 24 நிமிட நேரத்திற்கு எரியூட்டம் செய்து விண்கலத்தின் வேகத்தை குறைத்த பின் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் அதை வெற்றிகரமாக நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம் ஆகியவை தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பின் தான் இச்சோதனை முயற்சியில் வெற்றி கண்டது. விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு முன் 515 கி.மீ தொலைவிலேயே அதில் போக்கு திருத்தம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி