செய்திகள் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை கொலை செய்த மகன்!…

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை கொலை செய்த மகன்!…

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தாயை கொலை செய்த மகன்!… post thumbnail image
புனே:-மகாராஷ்ட்டிர மாநிலம், புனேவில் உள்ள புறநகர் பகுதியான பிம்ப்ரியில் வசித்துவந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண், அதே பகுதியில் வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்.

இதை அறிந்த அவரது மகன் பல வேளைகளில் தாயாரை கண்டித்து, குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.அதை மீறிய வகையில் தனது மனதுக்கு பிடித்த அந்நபருடன் அந்தப் பெண் தொடர்ந்து நெருக்கம் காட்டி வந்ததால், தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு கள்ளக்காதலனுடன் தாயாரை கையும் களவுமாக பிடித்த மகனுடன் வழக்கம் போல் அந்தப் பெண் தகராறு செய்யத் தொடங்கினார்.

இதனால் ஆவேசமடைந்த மகன் பெற்ற தாய் என்றும் பாராமல் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக ரோஹித் லக்‌ஷ்மன் சந்தனே என்பவரை கைதுசெய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி