செய்திகள்,திரையுலகம் நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…

நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…

நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஷங்கர் தற்போது ‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி வேலைகளுக்கிடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஆகாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது ஆச்சரியமளிப்பதாக உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் கருதுகின்றன.

பொதுவாக, தெலுங்குத் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க மாட்டார்கள். அப்படியிருக்க ஷங்கர், மகேஷ் பாபு படத்தின் விழாவில் கலந்து கொண்டதுதான் ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். ‘ஐ’ படம் வெளியான பின் ஷங்கர் யாரை வைத்து படத்தை இயக்குவார் என்பது இன்னும் சரியாகத் தெரியாத நிலையே உள்ளது. அவர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

விஜய்யும் இயக்குனர் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு வேளை ஷங்கர், மகேஷ் பாபு பட விழாவில் கலந்து கொண்டது கூட அவர் அடுத்து இயக்கப் போகவது மகேஷ் பாபுவைத்தான் என டோலிவுட் வட்டாரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி