சென்னை:-தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், டாணா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, ஆபத்தான நிலையில் இருப்பதாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயாய் செய்தி பரவி வருகிறது. மேலும் பலர் சென்னைக்கு, சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.இதுப்பற்றி விசாரித்ததில் இது முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்தது.
சிவகார்த்திகேயன், தற்போது டாணா படத்திற்காக நார்வே சென்றுள்ளார். இருதினங்களுக்கு முன்னர் நார்வே சென்றவர், அங்கு நடைபெறும் பாடல் காட்சிகள் மற்றும் இதர காட்சிகளை முடித்து கொண்டு சென்னை திரும்புகிறார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி